பாக். கோரிக்கை
இந்நிலையில், இந்திய அணி ராணுவ தொப்பியுடன் விளையாடியதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டுள்ளது.இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மனி கூறியதாவது:
நம்பிக்கை தன்மை
கிரிக்கெட்டையும், விளையாட்டையும் அரசியலுக்காக பயன்படுத்த கூடாது. இந்திய அணி வீரர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் கிரிக்கெட்டில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கைத் தன்மையை இழந்துவிட்டனர்.
தடை விதித்த ஐசிசி
முன்னதாக,இங்கிலாந்து வீரர் மொயின் அலி மற்றும் தென் ஆப்ரிக்கா சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகியோர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து விளையாடியனர். அதனால், ஐசிசி அவர்களுக்கு தடை விதித்தது.
பாக். வலியுறுத்தல்
அவர்களுக்கு வழங்கிய தண்டனையைப் போலவே இந்திய அணி மீதும் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.முன்னதான ஐசிசியிடம் அதற்கான அனுமதி வாங்கப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.