சச்சின் டெண்டுல்கரை விட, அகமது செஷாத் சிறந்த வீரர்.. பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் கருத்துக்கு எதிர்ப்பு
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான்களான சயீத் அன்வர், வீரேந்திர சேவாக், ரோஹித் ஷர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களை விட அகமது ஷேசாத்தை சிறந்தவர் என பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், தெரிவித்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்ப, முன்னாள் வீரர்கள் பசித் அலி, கம்ரான் அக்மல் ஃபர்ஹானைக் கேலி செய்ததுடன், அவரது 'தவறுக்காக' மன்னிப்பு கோரினர்.
ஃபர்ஹானின் தேர்வைக் கேட்டு பசித் அலி அதிர்ச்சியடைந்தார். அவர், "இது நூறு சதவீதம் பொய். சச்சினை விட ஷேசாத் சிறந்தது என்று சொல்லுமளவுக்கு சாஹிப்சாதா பைத்தியமாகவில்லை. தயவுசெய்து இந்தத் தலைப்பை நிறுத்துங்கள்" என்று தனது யூடியூப் நிகழ்ச்சியான 'தி கேம் பிளான்' நிகழ்ச்சியில் கைகூப்பியபடிக் கேட்டுக்கொண்டார்.

காணொளியைப் பார்த்த கம்ரான் அக்மல் சிரிப்பை அடக்க முடியாமல், "சாஹிப்சாதா ஒரு கிரிக்கெட் வீரர், அவர் யோசிக்க வேண்டும். ஆதர்ச வீரரைச் சொல்வது வேறு, ஆனால் சயீத் அன்வர், சச்சின் டெண்டுல்கரை விட அகமது ஷேசாத் சிறந்தவர் என்பது சரியில்லை. அவர் இன்னும் சிறப்பாக பதிலளித்திருக்க வேண்டும்" என்றார்.
"சாஹிப்சாதாவை சந்திக்கும்போது, அன்று அவர் சுயநினைவோடு இருந்தாரா என நிச்சயம் கேட்பேன்" என பசித் அலி உறுதியளித்தார். "ஃபர்ஹானின் தேர்வு குறித்து யாராவது கேட்டால், பசித் அலி, கம்ரான் அக்மல் இருவரும் அதற்காக மன்னிப்பு கோருகிறார்கள் எனச் சொல்லுங்கள்" என்று கம்ரான் அக்மலும் தெரிவித்து, தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே, சாஹிப்சாதா ஃபர்ஹான் பாகிஸ்தான் டி20 அணியில் தொடக்க வீரராக தனது இடத்தைப் பலப்படுத்தியுள்ளார். 37 டி20 போட்டிகளில் 917 ரன்கள் அடித்துள்ள (8 அரை சதங்கள்) அவர், இம்முறையில் சராசரியாக 25-க்கு மேல் வைத்துள்ளார். ஒருநாள் (ODI) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை அறிமுகமாகவில்லை.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தானின் உத்தேச அணியில் சாஹிப்சாதா இடம்பெற்றுள்ளார். ஐசிசி (ICC) ஜனவரி 1-ஆம் தேதிக்குள் அணியைச் சமர்ப்பிக்க காலக்கெடு விதித்திருந்தது. உத்தேச அணியில் ஜனவரி 31 வரை ஐசிசி அனுமதி இன்றி மாற்றங்களைச் செய்ய அணிகளுக்கு அனுமதி உண்டு. எனினும், ஜனவரி 31-க்குப் பிறகு செய்யப்படும் எந்த மாற்றங்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் கட்டாயம் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications