
சூப்பர் ஓவர் ஆட்டம்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் லாகூர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹேரிஸ் ரௌஃப், ஃபீல்டர் கம்ரன் குலாமை கண்ணத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று லாகூர் அணிக்கும், பெஷாவர் சல்மி அணிக்கும் இடையில் லீக் போட்டி நடைபெற்றது. இதில் பெஷாவர் சல்மி அணி சூப்பர் ஓவர் முறையில் வென்றது.

தவறிய கேட்ச்
இப்போட்டியில் லாகூர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹேரிஸ் ரௌஃப் வீசிய பந்தை, பேட்ஸ்மேன் ஹஸ்ரதுல்லா ஜாஜை தூக்கி அடித்தார். அதனை ஃபீல்டர் கம்ரான் குலாம் பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதே ஓவரில், மீண்டும் ஜாஜை தூக்கியடிக்க, அதனை மற்றொரு ஃபீல்டரான பாவத் அகமது கேட்ச் பிடித்துவிட்டார்.

திடீரென அறைந்த பவுலர்
தான் தவறவிட்ட கேட்சை மற்றொருவர் பிடித்துவிட்டார் என்ற மகிழ்ச்சியை கொண்டாட பௌலர் ஹேரிஸ் ரௌஃப்பிடம் சென்று கம்ரான் குலாம் வாழ்த்துக் கூறினார். அப்போதுதான், கேட்ச் விட்ட கம்ரான் குலாம் கண்ணத்தில் ரௌஃப் பளார் என ஓங்கி அறைந்தார். இது அருகில் இருந்த சக வீரர்களுக்கு சங்கடமானது.
Wreck-it-Rauf gets Haris! #HBLPSL7 l #LevelHai l #LQvPZ pic.twitter.com/wwczV5GliZ
— PakistanSuperLeague (thePSLt20) February 21, 2022
தர்ம சங்கடம்
எனினும் கம்ரான் குலாம் சிரித்துக்கொண்டு, அதனை ஜாலியாக எடுத்துக்கொண்டார். கேப்டன் ஷாஹீன் அப்ரீடியும் பவுலரை கண்டிக்காமல் சகஜமாக களைந்து சென்றுவிட்டார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஆனால் அவர்களுக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆட்டத்தின் 17வது ஓவரின்போது, கம்ரான் குலான் ரன் அவுட் செய்த போது, ரௌஃப் ஓடிவந்து கம்ரானை கட்டிப்பிடித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











