Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதை செய்தால் பணம் தானாக வரும்”.. பாகிஸ்தான் வீரர்களை எச்சரித்த முன்னாள் வீரர் இக்பால் காசிம்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், முன்னாள் தலைமைத் தேர்வு குழு தலைவருமான இக்பால் காசிம், தற்போதைய தலைமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்றைய பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் நாட்டின் பெருமையை விடப் பணத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய இக்பால் காசிம், இளம் வீரர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு பெருமளவு குறைந்துள்ளதாக குற்றம் சுமத்தினார். அவர்கள் கடின உழைப்பு, ஆட்டத்தின் மீதான விழிப்புணர்வு மற்றும் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல், பணத்தின் பின்னால் ஓடுவதாகவும், நாட்டிற்காக விளையாடுவதை விடப் பெரிய பெருமையும், அங்கீகாரமும் ஒரு வீரருக்குக் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.

Pakistan Cricketers Too Focused on Money Lack Game Awareness says Iqbal Qasim

"காலங்கள் மாறினாலும் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை சூத்திரம் ஒன்றுதான். ஒரு வீரர் தனது ஆட்டத்தை மேம்படுத்த தனிப்பட்ட முறையில் எவ்வளவு நேரம் உழைக்கிறார் என்பதுதான் முக்கியம். ஆனால் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது நடப்பதில்லை. இன்றைய இளம் வீரர்கள் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் தரவுகளை (data) மட்டுமே அதிகமாக நம்பியிருக்கிறார்கள். தங்களின் பலவீனங்களைக் கண்டறிந்து திருத்திக்கொள்ள தனிப்பட்ட முறையில் அவர்கள் முயற்சி செய்வதில்லை. வீரர்கள் தங்கள் ஆட்டத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டால் பணம் தானாகவே தேடி வரும்" என்று காசிம் கூறினார்.

பாகிஸ்தான் அணி 2026-ஆம் ஆண்டில் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையிலேயே செயல்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சில வெற்றிகளைப் பெற்ற போதிலும், டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணி மிக மோசமாகச் செயல்பட்டது. மேலும், வங்கதேச அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்விகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

“ஹர்திக் பாண்டியா எங்க டீமுக்கு வரப் போகிறார்”.. வருணை வம்பிழுத்ததால் உற்சாகத்தில் KKR ரசிகர்கள்

“ஹர்திக் பாண்டியா எங்க டீமுக்கு வரப் போகிறார்”.. வருணை வம்பிழுத்ததால் உற்சாகத்தில் KKR ரசிகர்கள்

பாகிஸ்தான் அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இக்பால் காசிம், தற்போதைய தேர்வுக்குழுவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களிடம் எதிர்காலத்திற்கான நீண்ட காலத் திட்டமிடல் இல்லை என்றும், முடிவெடுப்பதில் சீரான தன்மை இல்லை என்றும் கூறினார். தனது காலத்தில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் கௌரவப் பொறுப்பாக மட்டுமே பணியாற்றினர் என்றும் இக்பால் காசிம் சுட்டிக்காட்டினார்.

Story first published: Thursday, August 13, 2026, 11:42 [IST]
Other articles published on Aug 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+