
அரையிறுதிப்போட்டி
இந்த இரண்டு போட்டிகளுக்கான நடுவர்களை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டிக்கு மராயிஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர் இல்லிங்வொர்த் ஆகியோர்கள் நடுவர்களாகவும் ரிச்சர்ட் கெட்டில்போரோ, மைக்கேல் காஃப் ஆகியோர் 3வது மற்றும் 4வது நடுவர்களாக செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு பிரச்சினை
இந்நிலையில் இதனை கேட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதற்கு காரணம் அம்பயர் மராயிஸ் எராஸ்மஸ் தான். நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடக்கத்தில் இருந்தே சர்ச்சையான முடிவுகளை கொடுத்து வருபவர் இவர் தான். இந்தியாவுடனான போட்டியில் கடைசி ஓவரில் கோலி கேட்டவுடன் முகமது நவாஸுக்கு நோ பால் கொடுத்தவர் இவர் தான். இவர் அதனை கொடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் வென்றிருக்கும்.

மறைமுக குடைச்சல்
இதே போல இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போதும் கோலியின் பேட்டிங்கில் நோ பால் கொடுத்திருந்தார். மேலும் மழைபொழிவு நிற்பதற்கு முன்னதாகவே போட்டியை தொடங்கியதால் வீரர்கள் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சிரமமானதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்ற வங்கதேசம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு அப்போது கேள்விக்குறியாகியிருந்தது.

ரசிகர்களின் கவலை
இப்படி பாகிஸ்தான் அணிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேண்டப்படாதவராக இருக்கிறார் இந்த எராஸ்மஸ். கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் அணிக்கு சர்ச்சை முடிவுகளை கொடுத்துள்ளார். எனவே அரையிறுதிப்போட்டிக்கு வருவதால் பாகிஸ்தான் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications