Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீராங்கனை கிராந்தி கவுடை பாலின ரீதியாக கேலி செய்த பாகிஸ்தான் ரசிகர்கள்.. ஆசிய கோப்பை சர்ச்சை

துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ஆட்டத்தின் போது, இந்திய வீராங்கனை கிராந்தி கவுடை நோக்கி பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் பாலின ரீதியாக கேலி செய்து அவதூறு பரப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுடின் தோற்றம் குறித்து மிகவும் இழிவாகப் பேசுவது தெளிவாகக் கேட்கிறது. அவர் ஒரு பெண் வீராங்கனை என்பதை மறைத்து, "அவர் ஒரு ஆண். அவர் பெண்ணா, ஆணா.. ஆண்தான்" என்று தொடர்ந்து கேலி செய்து கூச்சலிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பாகிஸ்தான் ரசிகர்களின் இந்த அநாகரிகமான செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Pakistan Fans Troll Indian Cricketer Kranti Goud at Women s Asia Cup 2026

விளையாட்டுத் துறையில் பெண் வீராங்கனைகளின் உடல் தோற்றம் குறித்தும், அவர்களது பாலினம் குறித்தும் இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துக்களைக் கூறுவது தொடர்கதையாகி வருகிறது. கிராந்தி கவுடுக்கு எதிராக மைதானத்தில் நடந்த இந்தச் சம்பவம், பெண் வீராங்கனைகள் மைதானங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொள்ளும் பாலின ரீதியான அச்சுறுத்தல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த ஆசிய கோப்பைப் போட்டியில் இந்திய மகளிர் அணி முற்றிலும் ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வெறும் 55 ரன்களுக்கு சுருட்டினர். இது சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக்குறைந்த ஸ்கோராகும். இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டுகளையும், பிரேமா ராவத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

"இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க".. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முன்னாள் கேப்டன் மிஸ்பா

இதனை அடுத்து 56 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, கிராந்தி கவுடுக்கு நடந்த இந்த அவமானம் கிரிக்கெட் உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, September 7, 2026, 11:38 [IST]
Other articles published on Sep 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+