
யோசிக்க கூட முடியாது
விராட் கோலியின் இந்த சதத்தை இந்திய வீரர் கம்பீர் குறைவாக மதிப்பிட்டு விமர்சனம் செய்தார். சச்சின் காலத்தையும் விராட் கோலி காலத்தையும் ஒப்பிடாதீர்கள் என்று அவர் கூறினார். இந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் கோலி குறித்து பாராட்டி பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இந்த காலத்தில் எல்லாம் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 45 சதங்களை அடிப்பதை எல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியாது.

வாய்ப்பை பயன்படுத்தினார்
ஆனால் விராட் கோலி சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே 45 சதத்தை அடித்திருக்கிறார். மேலும் சர்வதேச அளவில் 73 சதங்களை விராட் கோலி அடித்திருக்கிறார். விராட் கோலிக்கு இந்திய அணியில் இளம் வயதிலேயே வாய்ப்பு கிடைத்தது உண்மைதான் .ஆனால் அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். விராட் கோலி இதே மைதானத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சதம் அடித்திருக்கிறார்.

முக்கியமான வீரர்
தற்போது அவருடைய பழைய பார்மை மீண்டும் சதம் அடித்தது மூலம் மீட்டு இருக்கிறார். உலகக்கோப்பை ,ஆசிய கோப்பை போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் விராட் கோலி எப்போதும் நன்றாகவே விளையாடி வருகிறார். விராட் கோலியின் ரன்கள் அடிக்கும் வேகம் வறண்டு போகவில்லை. இதுவே விராட் கோலி இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பதை கட்டுவதாக கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார்.

மற்றொரு சாதனை
இதனிடையே சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையான சொந்த மண்ணில் 20 சதம் அடித்ததை விராட் கோலி தற்போது சமன் செய்திருக்கிறார். எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 4 ரன்கள ஆட்டம் இழந்ததார். இதனால் இந்திய அணி சற்று நெருக்கடி சந்தித்தது. இதனிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications