அருமையான தொடக்கம்
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ராகுலும், ரோகித்தும் அபார தொடக்கம் அமைத்திருக்கின்றனர். தொடக்கத்தில் பவுலிங்கை எதிர்கொள்ள ராகுல் தடுமாறினார். லேசாக தடுமாறிய ரோகித், பின்னர் மட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். விளைவு அதிரடி சதம்... லேசாக ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது பாக் பவுலிங்.
அல்வா வாய்ப்பு
பவுலிங் சொதப்பியது போலவே.. ரோகித்தை ரன் அவுட்டாக்கும் அல்வா வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறது பாகிஸ்தான். 10வது ஓவரில் அந்த சொதப்பல் அரங்கேறி இருக்கிறது. முதல் பந்தை வீசிகிறார் ரியாஸ். மறுமுனையில் பந்தை எதிர்கொண்ட ராகுல் அடிக்கிறார்.
|
2வது ரன்னுக்கு ரோகித்
இருவரும் ஒரு ரன் ஓடி எடுக்கின்றனர். 2வது ரன்னுக்காக எதை பற்றியும் யோசிக்காமல் ஓடி வருகிறார் ரோகித். ஒரு கட்டத்தில் ஸ்டார்டிங் கொடுத்த ராகுல் பின்னர் மறுக்க, ரோகித் கிட்டத்தட்ட ஆடுகளத்தின் முக்கால் பங்கு தூரத்தைக் கடந்திருந்தார்.
தப்பி பிழைத்த ரோகித்
ஆனால், பந்தை எடுத்த பீல்டரோ, கீப்பர் எண்டுக்கு வீசாமல், பவுலர் இருக்கும் திசையை நோக்கி வீசினார். அங்கிருந்த பீல்டர் அதையும் தவறவிட, அதற்குள் கிரீஸை அடைந்து தப்பிப் பிழைத்தார் ரோகித்! மிஸ்சானது அற்புதமான ரன் அவுட். அந்த ரன் அவுட் கோட்டை விட்டதன் விளைவு 50 ரன்களை கடந்தார் ரோகித். பாக்.கின் இந்த சொதப்பல் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக மாறக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.