பாக். செய்த தவறு
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷாகின் ஆப்ரிடி கடைசி பந்தை எதிர்கொண்டார். அப்போது ஜிம்பாப்வே வீரர் பந்துவீசுவதற்கு முன்பே , அங்கு (NON STRIKER) நின்று கொண்டிருந்த வசீம் , கிரீஸை விட்டு பாதி வெளியேறிவிட்டார். இது, ஐசிசியின் புதிய விதிகளின் படி தவறாகும்.
பாதகம்
வெற்றிக்கு 3 ரன்கள் என தேவைப்படும் போது, பந்துவீசுவதற்கு முன்பே பேட்ஸ்மேன்கள் ஓடினால், அது பந்தவீசும் அணிக்கு தான் பாதகத்தை ஏற்படுத்தும். ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் இப்படி செய்தும் ரன் அவுட்டனது தனி கதை. பாகிஸ்தான் வீரர்கள் இதே தவறை இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் செய்தனர்.
பிராட் ஹாக் கோரிக்கை
ஆனால், இந்தியா தான் ரன் அவுட் செய்யாமல் விட்டது. தற்போது மீண்டும் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் செய்து கையும் களவுமாக சிக்கி கொண்டனர். இந்த நிலையில், இந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய விரர் பிராட் ஹக், பேட்ஸ்மேன்கள் இப்படி செய்வது பெரும் குற்றம். இதனால் பந்துவீசும் அணிக்கு தான் ஆபத்து. இதனை தடுக்க ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
5 ரன் பெனால்டி தேவை
இதனிடையே, பேட்ஸ்மேன்கள் பந்துவீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி மட்டும் போதாது என்று குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், 5 ரன்கள் பெனால்டி போன்ற விதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு டி20 உலககோப்பையில் இதுவரை எந்த வீரரும் அப்படி ரன் அவுட் செய்யப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் மட்டும் 2 முறை வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தது உடன் நிறுத்தி கொண்டு இருக்கிறார்.