
பாக். வீரர்கள் ட்வீட்
இந்நிலையில் ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து என அறிந்தவுடன் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் துடித்துள்ளனர். பண்ட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார். இதே ஆல்ரவுண்டர் சதாப் கானும், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சோயிஃப் மாலிக்
ரிஷப் பண்ட் குறித்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிஃப் மாலிக், " பண்ட்-ன் விபத்து குறித்து தற்போது தான் தெரியவந்தது. சீக்கிரமாக எழுந்து வாருங்கள் சகோதரரே, உங்களுக்காக நிறைய பிரார்த்தனைகளை செய்யப்போகிறேன் எனக்கூறியுள்ளார். முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.

சீக்கிரம் வாருங்கள்
இதே போல முன்னாள் வீரர் ஹசன் அலி, " ரிஷப் பண்ட்-க்கு எந்தவித பெரிய பாதிப்புகள் இருக்காது என நம்புகிறேன். நீங்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். உங்களுடன் கடவுள் துணையாக நின்று சீக்கிரமாக குணப்படுத்துவார். களத்தில் மீண்டும் வாருங்கள், உங்களின் அதிரடியை காண வேண்டும் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

உடல்நிலை அப்டேட்
இது ஒருபுறம் இருக்க, பண்ட்-ன் உடல்நிலை குறித்த அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதில், பண்ட்-க்கு தலை மட்டும் கை, கால்களில் பெரியளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எலும்பு முறிவு எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. ஆங்காங்கே காயங்கள் உள்ளதால், முழுமையாக குணமடைய குறைந்தது 6 மாதங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











