விமர்சிக்கப்பட்ட தொப்பி விவகாரம்
முன்னதாக புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செத்தும் விதமாக,கடந்த மார்ச் மாதம் இந்தியா, ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியின் போது இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். இந்த 2 செயல்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பின.
இந்தியா, பாக். மோதல்
இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர் பவத் சவுத்ரி, தோனியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சர்வதேச விளையாட்டில் இது போன்ற செயல்களை அனுமதிக்க கூடாது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை போட்டிகளானது வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.
பாக். பிளான்
இந்த உலக கோப்பை போட்டியின் முக்கிய போட்டி என்றால்...அது இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிதான். அந்த முக்கிய போட்டியில் தோனியின் செயலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டிருந்தனர்.
கிரிக்கெட் வாரியம் மறுப்பு
போட்டியில் ஒவ்வொரு வீரரும் அவுட் ஆகும் போது, வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட, அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக அதனை மறுத்து விட்டது.
அரசு அறிவுறுத்தல்
வீரர்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும், அரசியல் ரீதியாக செயல்பாடுகளை செய்யக் கூடாது என்று இம்ரான் கான் அறிவுறுத்தியதாக, பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.