For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தண்டனையிலிருந்து தப்பிக்க பாகிஸ்தான் போடும் புது பிளான்.. பிசிசிஐ பதிலடி கொடுக்க ரெடி

இஸ்லாமாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணித்தால் ஐசிசியின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதால், அதிலிருந்து தப்பிக்கப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு புதிய சட்டப் பிரிவைக் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானின் இந்தத் திட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மிகக் கடுமையான வாதங்களால் முறியடிக்கத் தயாராகி வருகிறது.

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால், பாகிஸ்தான் வாரியத்திற்குப் பெரும் அபராதம் மற்றும் நிதி நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் பாயும் அபாயம் உள்ளது.

Pakistan to use Force Majeure Strategy to Avoid ICC Penalties for Boycotting India Clash at T20 World Cup 2026

தப்பிக்க ஒரு வழி

ஐசிசி ஒப்பந்த விதிகளின்படி, எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதற்குக் குறிப்பிட்ட விதிவிலக்கு அளிக்கப்படும். இதைத்தான் 'ஃபோர்ஸ் மஜூர்' (Force Majeure) என்று அழைப்பார்கள்.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விதியைப் பயன்படுத்தித் தப்பிக்க முயல்கிறது. அதாவது, "நாங்கள் விளையாடத் தயாராகவே இருந்தோம். ஆனால், எங்கள் நாட்டு அரசாங்கம் சமூக வலைத்தளம் மூலமாகத் தடை விதித்துவிட்டது. அரசின் உத்தரவை எங்களால் மீற முடியாது. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம். இது ஒரு அசாதாரணச் சூழ்நிலை" என்று ஐசிசியிடம் வாதிடப் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அபராதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது அவர்களின் கணக்கு.

பிசிசிஐ-யின் கிடுக்கிப்பிடி வாதம்

பாகிஸ்தானின் இந்த வாதம் மிகவும் பலவீனமானது என்று பிசிசிஐ கருதுகிறது. இது குறித்துப் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

"பாகிஸ்தான் அரசு டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாடக் கூடாது என்று அறிவித்த அதே நாளில்தான், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடியது. அரசுக்கு உண்மையிலேயே கொள்கை ரீதியான எதிர்ப்பு இருந்தால், அந்தப் போட்டியையும் தடுத்திருக்க வேண்டும். அப்போது விளையாட அனுமதித்துவிட்டு, இப்போது மட்டும் தடை விதிப்பது ஏற்புடையதல்ல" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருப்பவர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர்தான் அந்த வாரியத்தின் காப்பாளராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது வாரியமும், அரசும் வேறு வேறு என்று எப்படிச் சொல்ல முடியும்? இரண்டும் ஒன்றுதான்" என்றும் பிசிசிஐ தரப்பில் வலுவான வாதம் முன்வைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் உறுதி

இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகையில், "பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்பதில் நாங்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ளோம்" என்று மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெறாவிட்டால், இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு 2 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், பாகிஸ்தான் இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தித் தப்பிக்க முடியாவிட்டால், ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் அபராதம் விதிக்கும். நிதியுதவியையும் நிறுத்த வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, February 5, 2026, 12:13 [IST]
Other articles published on Feb 5, 2026
English summary
Pakistan Cricket Board attempts to use the "Force Majeure" legal clause to dodge ICC sanctions for skipping the 2026 T20 World Cup match against India, but BCCI counters by highlighting PCB's political ties and recent U-19 games.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+