சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 299 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து 14 ரன்கள் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 68 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்ற நிலையில் தடுமாறி வருகிறது. தற்போது ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் அணி 82 ரன்கள் தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியின் போது நிகழ்ந்த சம்பவம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் இரண்டு விக்கெட் இழந்து இருந்தபோது ஸ்மித், சஜித் விசிய பந்தை தூக்கி அடித்தார். அது பவுண்டரியை நோக்கி சென்றது. அப்போது பந்தை தடுப்பதற்காக ஓடி வந்த பாகிஸ்தான் வீரர் ஷயிம் அயூப் முயற்சி செய்தபோது மைதானத்தில் புல் தரை கழன்று அவருடைய காலில் சிக்கியது. இதில் தடுமாறி ஆயூப் கீழே விழுந்தார்.