For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உயிரைப் பறித்த ஓவர் பவுன்சர்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு நடந்த பரிதாபம்

அதிவேகத்தில் வீசப்பட்ட பந்து பவுன்சராகி பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரரின் உயிரைப் பறித்த துயரச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Devarajan

இஸ்லாமாபாத்: அதிவேக பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில், பாகிஸ்தானின் முதல் தர போட்டி இளம் வீரர் ஜுபைர் அகமது, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானின் கிளப் அணியில் விளையாடி வந்தவர் இளம் வீரர் ஜுபைர் அகமது. அவர் மர்தானில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14 ஆம் தேதி) விளையாடியபோது பவுன்சர் பந்து அவரது தலையில் தாக்கியது.

Pakistan Young cricketer Zubair Ahmed dies after being struck by bouncer

ஹெல்மெட் போடாத நிலையில், அவர் பேட்டிங் செய்ததால், படுகாயம் அடைந்த நிலையில், ஜுபைர் அகமது உயிரிழந்துள்ளார்.

ஜூபைர் அகமது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், " பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது. ஜுபைர் அகமது குவெட்டா பியர்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பிலிப் ஹூக்ஸ் உள்ளூர் போட்டியின் போது, பவுன்சர் பந்து பின்கழுத்து பகுதியில் தாக்கியதில் மைதானத்திலேயே நினைவு இழந்து சுருண்டு விழுந்து இறந்தார். அதன் பிறகு பாகிஸ்தான் ஜுபைர் அகமதுவின் மரணம் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது.

Story first published: Wednesday, August 16, 2017, 18:40 [IST]
Other articles published on Aug 16, 2017
English summary
Pakistan Young cricketer Zubair Ahmed dies after being struck by bouncer in Mardan. Pakistan Cricket Board broke the news via their Twitter account Today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+