
என்னா அடி
இந்திய அணி வீரர்கள் முதல் 2 ஓவரில் சுமாராக விளையாடினாலும் பின்னர் சுதாரித்தனர். அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா, பலே பாண்டியாவாக மாறி ஹாட்ரிக் சிக்ஸ்களை பறக்கவிட்டு கடைசி நேரத்தை ஸ்கோரை கிச் என்று உயர்த்தினார். 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

மந்தமான ஆட்டம்
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே மந்தமாக விளையாடி வந்தனர். மழையும் இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது பாகிஸ்தான்.
164 ரன்களே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். இதையடுத்து டக்-ஒர்த் லெவிஸ் முறைப்படி இந்திய அணி 124 ரன்களில் வென்றது.

இந்தியாவில் கொண்டாட்டம்
இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நள்ளிரவு நேரத்திலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெடிச்சத்தம் விண்ணை பிளந்தது.
பாகிஸ்தானிலும் சத்தம்
பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் பல இடங்களில் கும்பலாக கூடி போட்டியை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் கோபமடைந்து டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கேயும் பல பகுதிகளில் டிவிகள் உடைபடும் சத்தம் கேட்டது.
சில்லு சில்லாக நொறுக்கினர்.
ஒரு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தவர்கள், பாகிஸ்தானை இந்தியா வென்ற உடன் கோபத்தில் பித்தளை சொம்பை வைத்து ஓங்கி அடித்து டிவியை உடைத்தார். ஆத்திரம் தீராமல் சில்லு சில்லாக நொறுக்கினார். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக அந்த நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











