
சிறந்த வெற்றி
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இறங்கிய இலங்கை 87 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. டி-20 போட்டியில் இதுதான் இந்தியாவின் சிறந்த வெற்றியாகும். மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இதில் வென்று இருக்கிறது.

சாஹலின் சாதனை
இந்த போட்டியில் சாஹல் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் போட்ட சாஹல் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். இவரது சுழலில் இலங்கை அணி மொத்தமாக அடங்கியது. இந்த சிறந்த பந்து வீச்சால் நேற்று இவருக்கு மென் ஆப் தி மேட்ச் பட்டம் வழங்கப்பட்டது.

ஆல் ரவுண்டர் பாண்டியா
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வெற்றிடத்தை பாண்டியா கண்டிப்பாக நிரப்பி இருக்கிறார். நேற்றைய போட்டியில் பேட்டிங் கிடைக்காமல் இருந்த பாண்டியா அதை பவுலிங் மூலம் சமன் செய்தார். சாஹலுக்கு ஈடு கொடுத்து பந்து வீசிய பாண்டியா 4 ஓவரில் 29 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.
கொண்டாட்டம்
இதில் பாண்டியா விக்கெட் எடுத்துவிட்டு ஷ்ரேயஸ் ஐயருடன் அதை கொண்டாடினார். அப்போது கைகளால் 'ஹை-பை' சொல்வது போலவே இவர்கள் கால்களால் சொல்லி உள்ளனர். அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்திய அணி ''கைகளில் 'ஹை-பை' சொல்லி பார்த்து இருக்கிறோம். கால்களால் சொல்லும் 'ஹை-பை' க்கு என்ன பெயர் வைப்பது'' என்று கேட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











