சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் தொடரை இந்தியா 227 ரன்களுக்கு இழந்துள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 91 ரன்களை அடித்து சிறப்பாக கொண்டு சென்றார் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்.

இந்நிலையில் போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, பந்த் மைதானத்தில் அதிகமான எனர்ஜியை கொண்டு வந்ததாகவும் அவர் அதை தொடரவே அனைவரும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை இந்திய அணி அடைந்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் இத்தகைய தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, அடுத்த 3 போட்டிகளில் சிறப்பான பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் சிறப்பான எனர்ஜியை மைதானத்தில் கொண்டு வந்ததாகவும் அவர் அதை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.