ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் 59ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டாஸ் வென்ற பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில்:
"நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். இந்த விக்கெட் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பேட்டிங்தான் எங்களின் பலமாக உள்ளது. அதை நாங்கள் நன்றாகப் பயன்படுத்துவோம். அனைவரும் உற்சாகத்துடன் இருக்கிறோம். எங்கள் மனநிலை மிகவும் வலுவாக உள்ளது. எங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்துவோம். இந்திய ராணுவத்திற்கு எங்களது வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன், மீண்டும் அணியில் சேர்ந்தது குறித்துப் பேசினார்: "நாங்களும் முதலில் பந்து வீச வேண்டும் என்று விரும்பினோம். இன்று இந்த பிட்ச் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். நான் 100% உடல் தகுதியுடன் இருக்கிறேன்.
சூர்யவன்ஷி பேட்டிங் செய்த விதத்தை நான் மதிக்கிறேன். அவர் எங்களுக்காக மிகவும் சிறப்பாக விளையாடினார். நான் நித்திஷ் ரானாவுக்குப் பதிலாக மூன்றாம் இடத்தில் விளையாடுகிறேன். ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக மபாக்கா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்றார்."
அணிகள்:
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரெல், வனிந்து ஹசரங்கா, குவேனா மபாக்கா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மாத்வால், ஃபசல்ஹக் ஃபாரூக்கி
ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பாக்ட் சப்: குமார் கார்த்திகேயா, ஷுபம் துபே, அஷோக் ஷர்மா, குணால் சிங் ரத்தோர், யுத்விர் சிங் சரக்
பஞ்சாப் கிங்ஸ் (விளையாடும் லெவன்): பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், நெஹால் வடேரா, மிட்செல் ஓவன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் சப்: விஜய் குமார் வைஷாக், ஹர்ப்ரீத் பிரார், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், முஷீர் கான்