இந்தியாவில் நடைபெறுகிறது
அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை தொடரை இந்தியா நடத்தவுள்ளது. முன்னதாக இங்கிலாந்து தொடர் மற்றும் ஐபில் 2021 தொடர்களையும் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து 2023ல் ஒருநாள் உலக கோப்பை தொடரையும் இந்தியா நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
எழுத்துப்பூர்வ உறுதி வேண்டும் -பிசிபி
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் வீரர்களின் விசா உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து வரும் ஜனவரி மாதத்திற்குள் எழுத்துப்பூர்வ உறுதி அளிக்க வேண்டும் என்று பிசிபி சிஇஓ வாசிம் கான் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக பிசிபி தலைவர் ஈசான் மணியும் ஐசிசி மற்றும் பிசிசிஐயிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
யூஏஇயில் நடத்த வேண்டும்
கிரிக்கெட் பாஸ் யூடியூப் சேனலில் பேசிய வாசிம் கான், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலையற்ற தன்மை காணப்படுவதால், டி20 உலக கோப்பை தொடரை யூஏஇக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஆசிய கோப்பை 2022ஐ நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூடிய விரைவில் நடைபெறும்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் எல்லை பிரச்சினை தொடர்ந்து நிலவுவதால் இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர் கூடிய விரைவில் இந்த நிலை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.