
வேற யாராச்சும் இருக்காங்களாப்பா
தற்போது பெப்சி நிறுவனத்தின் இடத்தில் வேறு நிறுவனத்தை உட்கார வைக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதற்காக சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனத்தை அது தேடி வருகிறதாம்.

அதெல்லாம் காரணம் இல்லை
இதுகுறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், சொந்தக் காரணங்களுக்காகவே பெப்சிகோ நிறுவனம் விலகியுள்ளது. மற்றபடி கிரிக்கெட்டுக்கு மரியாதை இல்லை என்ற காரணம் எல்லாம் கிடையாது. இந்த ஆண்டுடன் அவர்கள் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கவலையே இல்லை
பெப்சிகோ போவதால் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களிடம் வங்கி உத்தரவாதம் உள்ளது. நாங்கள் நினைத்தால் அதை முடக்கி வைக்க முடியும். ஆனால் அதைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

அடுத்தவரிடம் கொடுப்போம்
அடுத்து வரும் மெயின் ஸ்பான்சரிடம் அந்த வங்கி உத்தரவாதத் தொகையை பெப்சிகோவிடமிருந்து மாற்றிக் கொடுக்க உதவி செய்வோம். இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், இது பெரிய விஷயமில்லை. மற்ற நிறுவனங்களிடம் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் மெயின் ஸ்பான்சரை முடிவு செய்வோம்.

ரொம்ப நன்றி
கடந்த காலங்களில் பெப்சியுடனான உறவு நன்றாகவே இருந்தது. அதை கெடுத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நடக்கப் போவது அமைதியாக முடியட்டும் என்றார் சுக்லா.

ரூ. 396 கோடி
பெப்சி நிறுவனம், பிசிசிஐயுடன் ரூ. 396 கோடிக்கு ஒப்பந்தம் செய்து பணம் கொடுத்துள்ளது. 2013 முதல் 2017 வரையிலான ஒப்பந்தமாகும் இது. ஆனால் 2013 போட்டித் தொடரின்போது நடந்த மேட்ச்பிக்ஸிங் உள்ளிட்டவை பெப்சியை அதிர்ச்சி அடைய வைத்து விட்டதாம். எனவேதான் அது விலகுவதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











