மும்பை: பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷாகின் அப்ரிடிக்கு பதிலாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர்கள் மோர்னே மோர்க்கல் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர்.
