லண்டன்: நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிவப்பு நிற தொப்பி அணிந்து விளையாடினர்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் 71வது ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2வது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது.
ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் தடைப்பட்டது. வது நாளில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது. போட்டியில் எப்போதும் இல்லாத வகையில், இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பி அணிந்து களமிறங்கினார்கள்.
வீரர்களின் ஜெர்சி எண்களும் சிவப்பு நிறத்தில் தான் இடம் பெற்றிருந்தன.இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் நடத்தும் அறக்கட்டளை சார்பில், நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஸ்டிராஸின் மனைவி ரூத், கடந்த ஆண்டு நுரையீரல் புற்று நோயால் 2018ம் ஆண்டு காலமானர். அவரது மரணம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரது நினைவாக ரூத் ஸ்டிராஸ் அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார் ஸ்ட்ராஸ். இந்த அறக்கட்டளை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவவும், அந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும், ஈடுபட்டு வருகிறது.