
டாப் ஆர்டர்
இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக ஆட போகும் வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணிக்காக கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் ஓப்பனிங் இறங்குவார்கள். கோலி ஒன் டவுன் இறங்குவார். அதன்பின் புஜாரா களமிறங்குவார்.

அடுத்து யார்
அதற்கு அடுத்து ரஹானே, ஹனுமா விஹாரி, குல்தீப் யாதவ், அஸ்வின், பும்ரா, ஷமி , முகமது சிராஜ் ஆகியோர் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவர்கள 11 பேர்தான் முதல் டெஸ்ட் போட்டியில் பவுலிங் செய்ய உள்ளனர். சமயங்களில் ராகுலுக்கு பதிலாக ப்ரித்வி ஷா களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

சொல்லிவிட்டார்
இவர்கள்தான் இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆட போகிறார்கள். கோலி முதல் போட்டிக்கு பின் வெளியேறிவிடுவார். அதற்கு பின் வேறு வீரர்கள் யாராவது அவரின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ளது. பெரும்பாலும் சுப்மான் கில் கோலியின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஓரம்கட்டுவார்
இதனால் மீதம் இருக்கும் சில முக்கியமான வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறுகிறார்கள். அதன்படி பண்ட், உமேஷ் யாதவ் , சைனி, ஆகியோர் மொத்தமாக ஓரம்கட்டப்பட உள்ளனர். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சைனி பவுலிங் செய்தார். ஆனால் இவர் சரியாக ஆடவில்லை.

போச்சு
அதன்பின் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் டெஸ்ட் தொடரிலும் இவர் ஆட மாட்டார் என்கிறார்கள். முதல் டெஸ்டிற்கு பின் கோலி நாடு திரும்பி விடுவார். அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார்.


Click it and Unblock the Notifications