
இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் இரண்டாவது டெஸ்டில் விளையாட போகும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியில் இந்த டெஸ்ட் போட்டிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. முக்கியமான வீரர் அணிக்குள் வர வாய்ப்புள்ளது.

நாளை மேட்ச்
இவருக்கு பதிலாக இந்திய அணியில் அக்சர் பட்டேல் மீண்டும் வருகிறார். அக்சர் பட்டேல் குல்தீப் யாதவ் இடையே யார் தேர்வு செய்யப்படுவார் என்று போட்டி நிலவியது. அக்சர் பட்டேல் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் வகையில் பந்து வீசுவார் . இதனால் இவர் நல்ல ஆப்ஷனாக இருப்பார்.

மாற்றம்
அதேபோல் பேட்டிங்கிலும் இவர் பெரிய அளவில் பங்களிப்பை கொடுப்பார். இதனால் குல்தீப் யாதவ்விற்கு பதிலாக அணிக்குள் கண்டிப்பாக அக்சர் பட்டேல் வருவார். அணியில் வேறு மாற்றம் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று கூறுகிறார்கள்.

டெஸ்ட் போட்டி
அதன்படி இந்திய அணியில் அடுத்த டெஸ்டில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், கோலி , ரஹானே, புஜாரா, பண்ட், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் ஆட உள்ளனர். இந்த முறை அணி தேர்வில் கோலியை விட ரவி சாஸ்திரியின் பங்கு அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

கடந்த போட்டி
கடந்த சில போட்டிகளால் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே, ரோஹித் சர்மா சரியாக ஆடுவது இல்லை. ஆனாலும் அவர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும். ரோஹித் சர்மா இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை என்றால் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள்.

விருப்பம்
கோலிக்கு ரோஹித் சர்மாவை மீண்டும் கொண்டு வருவதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ரவி சாஸ்திரி ரோஹித் சர்மாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதனால் இந்த டெஸ்டில் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications