
மொத்தமாக ஆடினோம்
அணியினர் அனைவரும் சேர்ந்து உழைத்து இந்த வெற்றியை அடைந்துள்ளோம். இது மகிழ்ச்சி தருகிறது. இருப்பினும் சில விஷயங்களில் நாம் முன்னேற்றத்தை செய்ய வேண்டியுள்ளது.

பந்து வீச்சில் கவனம் தேவை
நமக்கு உண்மையிலேயே அதி வேகமான பவுலர்கள் தேவையா அல்லது அதி வேகமாக வீசாத பவுலர்கள் தேவையா அல்லது சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசும் பவுலர்கள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

பங்கா பெஸ்ட்தான்
வங்கதேச வீரர்கள் நல்ல அணியினர். சிறந்த திறமையுடன் உள்ளனர். நிலைத்து ஆடுகின்றனர். சிறந்த அணிகளில் ஒன்றாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது.

ரன் குவிச்சா போதும்
ஸ்கோர்போர்டில் ரன் குவிய வேண்டும். அப்போதுதான் அதை டிபன்ட் செய்ய முடியும். அதைத்தான் நாங்கள் இன்று செய்தோம். பந்து வீச்சாளர்களையும் அது இயல்பாக பந்து வீச வைக்கும். அவர்களுக்கு வேலை எளிதாகும் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications