
ஆல்-அவுட்
2வது இன்னிங்சில் இலங்கை குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் ஆகும்வகையில் நீங்கள் பேட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு நடந்தால், தங்களுக்கு சூதாட்டத்தில் அதிக பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

மறுப்பு
முதலில் அவர்கள் அணுகிய, குசால் பெரேரா, இதை மறுத்துவிட, இரண்டாவதாக ஹீரத்தை அவர்கள் அணுகியுள்ளனர். ஹீரத்தும், இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

ரூ.1 கோடி லஞ்சம்
சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் தருவதாக கூறியும், இவ்விரு வீரர்களும் சூதாட்டதிற்கு உடன்பட மறுத்துவிட்டனராம். இதையடுத்து, சூதாட்ட தடுப்பு பிரிவுக்கும், இவ்விரு வீரர்களும் புகார் அளித்தனர்.

விசாரணை
இந்த விவகாரம் குறித்து இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா கூறுகையில், லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











