Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வாலை தொடர்ந்து 3வது வீரருக்கு தண்டனை.. எல்லை மீறிய பிரபாத் ஜெயசூர்யாவுக்கு ஐசிசி கண்டனம்

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு இலங்கை வீரரான பிரபாத் ஜெயசூர்யாவுக்கும் ஐசிசி தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் கடைசிப் பந்தில், நைட்வாட்ச்மேனாகக் களம் இறங்கிய பிரபாத் ஜெயசூர்யா இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மங்கலான வெளிச்சம் காரணமாக ஆட்டத்தை நிறுத்த அம்பயர்கள் மறுத்ததால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த ஜெயசூர்யா, அவுட்டான கோபத்தில் மைதானத்தை விட்டு வெளியேறும் போது பவுண்டரி லைனின் பலகைகளைத் தனது பேட்டால் பலமாகத் தாக்கினார். மேலும், டிரஸ்ஸிங் ரூம் திரும்பியவுடன் அவர் தனது க்ளவுஸ்-ஐ வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்.

Prabath Jayasuriya Reprimanded by ICC Third player to be punished by ICC in Colombo Test

இவரது இந்த நடத்தை, ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.2 ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டது. இந்தப் பிரிவு மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்துவது அல்லது தவறாகப் பயன்படுத்துவது தொடர்பானதாகும். இதன் காரணமாக, பிரபாத் ஜெயசூர்யாவுக்கு ஐசிசி அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவரது ஒழுங்குமுறை கணக்கில் 1 டீமெரிட் புள்ளியையும் சேர்த்துள்ளது. கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் தவறு இதுவாகும்.

இதற்கு முந்தைய நாளில் (ஞாயிற்றுக்கிழமை), இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதலுக்காக இருவருக்கும் 25 சதவீத அபராதம் மற்றும் தலா 1 டீமெரிட் புள்ளி விதிக்கப்பட்டது.

முதல் இன்னிங்ஸில் 17 வது ஓவரின் கடைசி பந்தில் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அவுட்டாகி வெளியேறிய ஜெய்ஸ்வாலை நோக்கி பெர்னாண்டோ சில வார்த்தைகளைக் கூற, அதற்கு ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்து நேருக்கு நேர் முட்டிக்கொண்டனர். இந்த அநாகரிகமான செயல்பாடு ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.12 ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டது.

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு கண்டிப்பா போவோம்”.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வங்கதேச அணி திட்டம்

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு கண்டிப்பா போவோம்”.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வங்கதேச அணி திட்டம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆட்டத்திறனைத் தாண்டி, இரு தரப்பு வீரர்களின் ஒழுங்கீனச் செயல்களாலும், ஐசிசி-யின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளாலும் தற்போது உலக கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி.. பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் 4 பந்துகளில் 2 விக்கெட்

Also Read

வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி.. பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் 4 பந்துகளில் 2 விக்கெட்
Story first published: Tuesday, August 25, 2026, 16:25 [IST]
Other articles published on Aug 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+