மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, சமூக ஊடகப் பிரபலம் மற்றும் நடிகையுமான அகிருதி அகர்வாலுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அகிருதிக்கு இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் எடுத்த சில ரொமான்டிக் புகைப்படங்களைப் பகிர்ந்து, "விளையாட்டு மைதானத்தில் சிக்ஸர்களை அடிப்பதிலிருந்து, என் வாழ்க்கையின் வெற்றிப் பயணத்தில் அவள் தான் என் சரியான இன்னிங்ஸ்," என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்விஷா அகிருதிக்கு மோதிரம் அணிவிப்பதும், மோதிரங்களை இருவரும் பெருமையுடன் காட்டும் காட்சிகளும் . அகிருதி, பிரித்வி ஷாவுக்கு மோதிரம் அணிவிப்பது போலவும் ஒரு படம் வெளியானது.இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகின் பலரது வாழ்த்துக்களையும் பெற்றது. ஐபிஎல் 2026 சீசனில் ஒப்பந்தமாகியுள்ள பிரித்வி ஷாவிற்கு, அவரது அணியான டெல்லி கேபிடல்ஸும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தது.
" title="டி20 உலககோப்பை 2026: சிறந்த பிளேயிங் XI.. எந்த இந்திய வீரர்களுக்கு இடம்.. வாஹன், ரஹானே அறிவிப்பு
லக்னோவைச் சேர்ந்த அகிருதி, மும்பைக்குச் சென்ற பிறகு சமூக ஊடகங்களில் பெரும் புகழ் பெற்றார். 'த்ரிமுகா' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், சமீபத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமண நிகழ்விலும் பிரித்வி ஷாவுடன் கலந்துகொண்டார்.
பிரித்வி ஷா, 2018ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சதம் அடித்து கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும், , ஒழுக்கம் மற்றும் உடற்தகுதி தொடர்பான சிக்கல்களால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அக்டோபர் 2024 இல் மும்பை ரஞ்சி அணியிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

ஐபிஎல் 2025 ஏலத்தில் ஷா எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. ஐபிஎல் 2026 மினி ஏலத்தின் ஆரம்ப கட்டங்களில் ₹75 லட்சம் அடிப்படை விலைக்குக்கூட அவர் விற்பனையாகவில்லை. இறுதியாக, டெல்லி கேபிடல்ஸ் அவரை இறுதி முடுக்கப்பட்ட சுற்றில் தேர்ந்தெடுத்ததன் மூலம், பிரித்வி ஷாவுக்கு லீக்கில் மீண்டு வர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.