சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையில் சிட்னியில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களுக்கு ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, ஒற்றை கைகளால் எகிறி குதித்து அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா பிடித்த கேட்ச் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையில் சிட்னியில் பயிற்சி ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தனர். அஜிங்க்யா ரஹானே சதமடித்தார்.
Good catch by Shaw!
— cricket.com.au (@cricketcomau) December 7, 2020
Paine's gotta go for 44 after a century stand with Green. Watch #AUSAvIND live: https://t.co/MfBZAvzAkr pic.twitter.com/yvhTgS1IvE
இதையடுத்து ஆஸ்திரேலியா ஏ அணி இரண்டாவது நாளான இன்று களமிறங்கியது. டிம் பெய்ன் சிறப்பாக விளையாடிய நிலையில், உமேஷ் யாதவின் பந்தை எதிர்கொண்ட அவர், அடித்து ஆட அது நேரடியாக பிரித்வி ஷா கைகளுக்கு சென்றது. தலைக்கு மேல் சென்ற அந்த பந்தை எகிறி குதித்து ஒற்றை கையால் பிடித்தார் ஷா. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், டக் அவுட் ஆன நிலையில் இந்த அவரது முயற்சி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.