
எப்படி
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்ட ப்ரித்வி ஷா வீரர் தற்போது முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார். முதல் போட்டியில் 50 ரன்கள் அடித்த இவர் தற்போது நடக்கும் போட்டியிலும் கலக்கி வருகிறார்.

பாண்டிச்சேரி
பாண்டிச்சேரிக்கு எதிராக இன்று மும்பை அணி ஆடிய போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடி ப்ரித்வி ஷா 227 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து இவர் அதிரடி காட்டி இருக்கிறார். முதல் தர போட்டிகளில் இன்று இவர் ஆடிய ஆட்டம் தேர்வுக்குழுவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ப்ரித்வி ஷா
இன்று இவர் 31 பவுண்டரி, 5 சிக்ஸ் அடித்து அசத்தி இருக்கிறார். இவரின் இந்த பேட்டிங் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் சரியாக ஆடவில்லை. கிடைத்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதிரடி
இதனால் இவருக்கு பதிலாக அணிக்குள் கில் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் எனக்கு திறமை இருக்கிறது என்று ப்ரித்வி ஷா நிரூபித்து இருக்கிறார். இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர் அதிரடி காட்ட தொடங்கி உள்ளார். ஆனால் ப்ரித்வி ஷா மீண்டும் அணிக்குள் வருவது இயலாத காரியம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications