புனே : புரோ கபடி லீக் தொடரின் 33 வது போட்டியில் புனேரி பல்தான் அணி, பெங்களுரு புல்ஸ் அணியை 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் புனேரி அணியின் மோஹித் கயாத் ரைடராக சிறப்பாக செயல்பட்டு 7 புள்ளிகளை பெற்றார். அதே அணியின் முஹம்மத்ரேசா தடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடி 6 புள்ளிகளை பெற்று அசத்தினார். இவர்கள இருவரின் ஆட்டமே அந்த அணியின் பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் முதல் பாதியிலேயே புனேரி பல்தான் அணி 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. முதல் பாதிக்குள் பெங்களுரு புல்ஸ் அணி இரண்டு முறை ஆல் - அவுட் ஆகி இருந்தது. இந்த நிலையில், இரண்டாம் பாதி துவங்கிய உடன் பெங்களுரு அணியை மூன்றாவது முறையாக ஆல் -அவுட் செய்த கதற விட்டது புனேரி அணி. குறிப்பாக முஹம்மத்ரேசாவை தாண்டி அந்த புனேரி அணியிடம் புள்ளிகளை பெற முடியாமல் சிக்கித் தவித்ததனர் பெங்களுரு வீரர்கள்.
ஆட்ட நேர முடிவில் புனேரி பல்தான்ஸ் 43 புள்ளிகளும், பெங்களுரு புல்ஸ் அணி 18 புள்ளிகளும் மட்டுமே பெற்றன. புனேரி அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.