கராச்சி: பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகள் கராச்சி, லாகூர் என இரு நகரங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இன்றி வெற்று மைதானங்களில் நடத்தப்படும் இப்போட்டிகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி மன்னிப்பு கோரினார்.
மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள இத்தொடரைக் குறைக்க, பிசிபி கடும் முயற்சி செய்கிறது. மேற்கு ஆசியப் போர் மற்றும் அதன் பெட்ரோலிய நெருக்கடி, அண்டை ஆப்கானிஸ்தானுடனான மோதல் ஆகியவை பாகிஸ்தானின் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் முல்தான், பெஷாவர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் திட்டமிடப்பட்ட பிஎஸ்எல், தற்போது கராச்சி, லாகூரில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பயணத்தைக் குறைக்கும் நோக்குடன், பிரான்சைஸ் உரிமையாளர்கள் மற்றும் பிசிபி பிரதமர் ஷேபாஸ் ஷெரீபுடன் ஆலோசித்து இம்முடிவு எடுக்கப்பட்டது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி "PSL தொடர்பான ஆலோசனைகள் பல நாட்களாக நடந்தன" என்றார். தற்போதைய சூழ்நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரியாததால், இத்தொடரை நடத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

"இது ஓர் சர்வதேச அடையாளம். வெளிநாட்டு வீரர்கள் இதில் இருக்கின்றனர். அனைவரும் பிஎஸ்எல் தொடர ஆர்வம் கொண்டுள்ளனர். ஒத்திவைத்தால் பின்னர் வேறு கால அவகாசம் கிடைக்காது. பயணத்தைக் குறைக்கும் புதிய அட்டவணையைத் தயாரித்துள்ளோம்" என்று நக்வி விளக்கினார். முழு நேர பிசிபி ஊழியர்கள் லீக்கில் பணியாற்ற மாட்டார்கள்.
போட்டியின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நக்வி மன்னிப்பு கோரினார்; டிக்கெட் பணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளித்தார். "சிரமத்திற்காக மன்னிப்பு கோருகிறோம்" எனவும் அவர் கூறினார். பகுதி நேர ஊழியர்கள் மட்டும் அணிகளுடன் இணைந்து பணியாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பிப்ரவரி பிற்பகுதியில் பதற்றம் உச்சமடைந்தது. இதைத்தொடர்ந்து, . மார்ச் 18 அன்று ஈத் அல்-பித்ர் பண்டிகைக்காக ஐந்து நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.

பாதுகாப்பு கவலைகளால் சில வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே விலகியுள்ளனர். பிசிபி-யின் இந்த புது அறிவிப்பு அவர்களின் பங்கேற்பில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மிகவும் பிரபலமான ஐபிஎல் உடன் மோதும் துணிச்சலை வெளிப்படுத்திய பிஎஸ்எல், புதிய ஏல முறை மற்றும் அணி விற்பனை மூலம் உத்வேகம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.