
வலுவான அணிகளை வென்றது
பஞ்சாப் அணி இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் டெல்லியை வென்றது. பெங்களூருவிடம் தோல்வியடைந்த பஞ்சாப், அதற்கடுத்த ஆட்டங்களில் மிகவும் வலுவான சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளை வென்றது. ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கியது.

ஹாட்ரிக்கிலும் போட்டி
அதே நேரத்தில் முதல் போட்டியில் பெங்களூருவை வென்ற கொல்கத்தா அணி, சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த கொல்கத்தா அணி, அதற்கடுத்த ஆட்டங்களில் டெல்லி மற்றும் ராஜஸ்தானை வென்றது. இந்த அணியும் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது.

கிறிஸ் லைன் அசத்தல்
கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழ, கிறிஸ் லைன் 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மழையால் ஆட்டம் பாதிப்பு
பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் சேர்த்தது. அப்போது திடீரென மழை பெய்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. கிறிஸ் கெயில் 49, ராகுல் 46 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு 28 பந்துகளில் 29 ரன்கள் தேவை என இலக்கு மாற்றப்பட்டது. லோகேஷ் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கிறிஸ் கெயில் 62 ரன்களும், மயாங்க் அகர்வால் 2 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. மேலும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications
