
சென்னை : டிஎன்பில் சீசன் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நாளை முதல் நடைபெறவிருக்கின்றன.
லீக் போட்டிகளில் இருந்து மொத்தம் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. திண்டுக்கல் ட்ராகன்ஸ்,மதுரை பேந்தர்ஸ்,லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் காரைக்குடி காளை ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்து விடும்.
