3வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டி தற்போது பகலிரவு போட்டியாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாநது அணி 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
4வது இந்திய வீரர்
நேற்றைய போட்டியில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும் ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஓலி போப்பை 28வது ஓவரில் வீழ்த்திய ரவி அஸ்வின் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
சாதனை முறியடிப்பு
இதன்மூலம் 599 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷாகிர் கானின் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (953), ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் (707) மற்றும் கபில் தேவ் (687) ஆகிய இந்திய வீரர்கள் முதல் 3 இடங்களில் உள்ள நிலையில் தற்போது 4வது வீரராக ரவி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
400 விக்கெட்டுகள் சாதனை
மேலும் டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்கள் சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 3 விக்கெட்டுகளே பாக்கி உள்ளது. இந்த 3 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் எட்டும் நிலையில் அந்த சாதனையையும் ரவி அஸ்வின் இந்த தொடரிலேயே முடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.