
தோல்விக்கான காரணம்
இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற காரணத்தால், தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, ரிஷப் பண்டை அணியில் சேர்த்தனர். ஆனால், அவரோ 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதே போன்று ஜடேஜாவுக்கு மாற்றாக அணியில் கொண்டு வரப்பட்ட அக்சர் பட்டேலும், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

கடைசியில் பேட்ஸ்மேன்
இந்த நிலையில், தமிழக சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினும், பிளேயிங் லெவனில் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது, கடைசி ஓவர்களில் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

அஸ்வின் சிறப்பு
தற்போது இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் கண்டிப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியில் 3 இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உள்ளனர். இவர்களை எதிர்கொள்ள அஸ்வினே சரியான பந்துவீச்சாளர். மேலும் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

யாருக்கு பதிலாக
இதனால் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெற வாய்ப்புள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் ரன்களை வாரி வழங்கினார். ஆனால், அவரை போலவே பந்துவீச கூடிய பிஸ்னாய் கொஞ்சம் கட்டுகோப்பாக செயல்பட்டார். இதனால், சாஹலுக்கு பதில் அஸ்வின் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











