
நைட் வாட்ச்மேன் ஏன்
இந்த நிலையில் வெற்றி பெற்றது குறித்து பேசிய அஸ்வின், 3வது நாள் அடுகளம் எப்படி செயல்படும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்னுடைய பாராட்டு எல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு தான். நைட் வாட்ச்மேனாக பேட்டிங் களமிறங்கியது என்னுடைய முடிவு தான். நான் பேட்டிங் செய்ய செல்கிறேன் என்று கூறினேன். அதற்கு புஜாராவும், டிராவிட்டும் ஒப்பு கொண்டார்கள்.

அதிர்ஷ்டம்
ஜடேஜாவுடன் இணைந்து பந்துவீசியது எனக்கு நல்ல உதவியாக அமைந்தது. ஜடேஜா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் என்னுடைய பார்ட்னராக அமைந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். அதே போன்று அக்சர் பட்டேலும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர். எங்கள் 3 பேருக்கும் பேட்டிங் நன்றாகவே தெரியும்.

யுத்திகளை மாற்றுவார்கள்
ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை உலகத்தரம் வாய்ந்த அணி. அவர்கள் எப்படியும் பிளான் பியை வைத்திருப்பார்கள்.அடுத்த டெஸ்ட் போட்டியில் இன்னும் வீரியமாக விளையாடி எங்களுக்கு நெருக்கடி தருவார்கள். தாம் என்ன தவறு செய்தோம் என்று சுய பரிசோதனை செய்து கொண்டு யுத்திகளை மாற்றி கொள்வார்கள் என நினைக்கிறேன்.

ஆஸி செய்த தவறு
என்ன நடக்குமோ என்று ஆஸ்திரேலியா மிகவும் யோசித்ததே அவர்கள் செய்த தவறாக நினைக்கிறேன். முதலில் பறக்காமல் நின்று யோசிக்க வேண்டும். நாம் பல விசயங்களை பற்றி யோசிக்கும் போது, கண் முன் நடக்கும் விசயம் குறித்து கோட்டை விட்டு விடுவோம். அடுத்த போட்டி நிச்சயம் அவ்வளவு எளிதாக இருக்காது. ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கும் ஆழமாக இருக்கிறது. ரோகித் சர்மாவின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











