
வேற்றுமை வெளிப்படுத்திய கோச்
சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட அந்த தொடரின் தற்காலிக கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையிலான வேற்றுமை குறித்து இந்திய பௌலிங் கோச் பரத் அருண் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கோபத்தை வெளிப்படுத்தாத ரஹானே
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின் கேப்டனாக செயல்பட்ட ரஹானே, அணியை பொறுமையாக வழிநடத்தினார். இந்நிலையில் ரவி அஸ்வினின் யூடியூப் சேனில் பேசிய பரத் அருண், பௌலர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் தனது கோபத்தை ரஹானே வெளிப்படுத்த மாட்டார் என்று பரத் அருண் கூறியுள்ளார்.

உடனடியாக கோபப்படும் கோலி
விராட் கோலி இரண்டு பந்துகளை தவறாக போட்டாலும் உடனடியாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி விடுவார் என்றும் அவரது எனர்ஜி சமயத்தில் கோபமாக அனைவராலும் புரிந்து கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இதனிடையே ஆஸ்திரேலிய தொடரில் தங்களை உணர்ந்து செயல்பட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

சிறப்பாக செயல்படுவது சவால்
நெருக்கடி நேரங்களில் சிறப்பாக செயல்படுவது என்பது மிகப்பெரிய சவால் என்றும் அதை இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார். அந்த சவாலை தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பாக அவர்கள் கருதி செயல்பட்டதாகவும் பரத் அருண் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











