
எப்படி
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரஹானே அடித்த 112 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 27 (நாட் அவுட்) ஆகியவை இந்திய அணிக்கு பெரிதும் உதவியது. முதல் இன்னிங்சில் முக்கியமாக இவரை விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் கடுமையாக திணறினார்கள்.

திணறல்
ஆஸ்திரேலிய பவுலர்கள் கும்மின்ஸ், ஹஸல்வுட், லைன், ஸ்டார்க் என்று எல்லோருடைய பந்தையும் ரஹானே மிகவும் திறமையாக எதிர்கொண்டார். பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால் என்று அனைத்து விதமான பந்துகளை ரஹானே அடித்து துவைத்தார். இவரை விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்றனர்.

விரக்தி
ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ஆடாத ரஹானே இப்படி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆட காரணம் இருக்கிறது . லாக்டவுன் காலத்தில் இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனியாக தயாராகி இருக்கிறார். கிட்டத்தட்ட 6 மாதம் சிவப்பு மற்றும் பிங்க் பந்துகளில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.

பயிற்சி
லாக்டவுன் நேரத்தில் பல வீரர்கள் வீட்டில் முடங்கிய நிலையில் ரஹானே மிக தீவிரமாக டெஸ்ட் போட்டிகளுக்காக பயிற்சி எடுத்துள்ளார். தனிப்பட்ட பயிற்சியாளர்களை நியமித்து அனைத்து விதமான பந்துகளையும் போட வைத்து பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். முக்கியமாக தனது சொந்த கிரிக்கெட் பயிற்சி மைதானத்தில் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்ச்களை வடிவமைத்து ரஹானே அதில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்,

உழைப்பு
இந்திய அணியில் கோலி வெளியேறிய பின் ரஹானேவின் கேப்டன்சியை பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவரின் பேட்டிங் பார்ம் குறித்தும் சிலர் விமர்சனம் செய்தனர். இணையத்தில் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இப்படி வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் ரஹானே பதில் அளித்துள்ளார்.

கடினம்
ஆனால் இந்த அதிரடி பேட்டிங் சாதாரணமாக ஒருநாளில் வரவில்லை. மிக நீண்ட கடின உழைப்பிற்கு பின் வந்துள்ளது. சரியாக ஆடவில்லை என்றால் வாய்ப்பு பறிபோயிவிடும் என்று ரஹானேவிற்கு தெரியும். இதன் காரணமாக மிக சரியாக திட்டமிட்டு, முறையாக பயிற்சி பெற்று ரஹானே புதிய பொலிவுடன் மீண்டும் களத்திற்கு வந்து இருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications