
டெஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார். கோலி சொந்த ஊர் திரும்புவதால் ரஹானே இந்திய அணியின் கேப்டனாக இருப்பார்.

ரஹானே
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரஹானே.. அணியில் முக்கியமான மாற்றங்களை செய்ய போகிறார் என்கிறார்கள். இந்திய அணியின் பவுலிங்கை மாற்றும் விதமாக புதிய வீரர்களை அவர் கொண்டு வர போகிறார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் ஷமி, பும்ரா, உமேஷ் ஆகிய மூன்று பவுலர்கள் கடந்த போட்டியில் பவுலிங் செய்தனர்.

அணியில் இல்லை
இதில் ஷமி காயம் காரணமாக ஆட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் உமேஷ் யாதவ் சரியாக ஆடாத காரணத்தால் அவரையும் அணியில் எடுக்க வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக அடுத்த போட்டியில் சைனி, சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார்.

நடராஜன்
இன்னொரு பக்கம் நடராஜன் ஷமிக்கு பதிலாக அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். நடராஜன் இதனால் தயாராக இருக்க வேண்டும். இந்திய டெஸ்ட் அணிக்குள் இடம்பெற ரெடியாக இருக்க வேண்டும் என்று ரஹானே, நட்ராஜனிடம் கூறியதாக தகவல்கள் வருகின்றன.

ஏன்
வலைப்பயிற்சியில் நடராஜன் வீசிய பவுலிங் பார்த்து ரஹானே இந்த திட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நடராஜன் உண்மையில் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது சந்தேகம்தான். சைனி, உமேஷ்,பும்ரா ஆகிய மூன்று பேர் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்புள்ளது என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் சிலர் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications