
இந்தியாவின் படுதோல்வி
கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஓப்பனிங் தரமாக இருந்தது. ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சேர்ந்து இந்தியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் 16 ஓவர்களிலேயே அந்த அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 170 ரன்கள் அடித்து வெற்றி கண்டது. லீக் சுற்றில் அபார வெற்றிகளை குவித்த இந்தியா, நாக் அவுட்டில் மோசமாக தோற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டிராவிட்டின் விளக்கம்
இந்நிலையில் இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது ஆனால் இன்று எங்களுக்கான நாளாக இல்லை. முக்கிய போட்டிகளில் நிறைய ரன்கள் தான் உதவும். 15 - 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ஒருவேளை 180+ ரன்களை அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

வீரர்களின் குற்றச்சாட்டு
இந்திய அணியும் அதிக ரன் அடிக்கதான் முயன்றது. ஆனால் பிட்ச்- மிகவும் மெதுவாக இருந்ததால் ரன்களை அடிக்கவே முடியவில்லை என வீரர்கள் கூறினர். எனினும் இதில் நாங்கள் செய்த தவறுகளை இனி சரிசெய்துக்கொள்வோம். எதிர்காலத்தில் வரும் போட்டிகளில் கவனம் செலுத்தப்போகிறோம் என டிராவிட் கூறினார்.

ரோகித் விளக்கம்
இதுகுறித்து பேசியிருந்த ரோகித் சர்மா, நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக தான் இருந்தோம். ஆனால் பவுலிங்கில் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. தொடக்கத்திலேயே சற்று பதற்றத்துடன் காணப்பட்டோம். அதனை இங்கிலாந்து வீரர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர் எனக் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications