இங்கிலாந்து அணி
இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் இங்கிலாந்து படு சூப்பரான ஸ்கெட்ச் ஒன்றை போட்டது. அதாவது அந்த அணியில் மொத்தமாக 7 பேட்ஸ்மேன்களை வைத்துவிட்டு, முழு நேர 4 வேகப்பந்துவீச்சாளர்களை களமிறங்கியுள்ளது. ஒரு முழு நேர சுழற்பந்துவீச்சாளர் கூட கிடையாது.
ஸ்டோக்ஸின் திட்டம்
ஏனென்றால் 5வது வேகப்பந்துவீச்சாளராக பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகவும் பலமானவர். இதே போல ஸ்பின்னரின் தேவை ஏற்பட்டால் ஜோ ரூட்டை பயன்படுத்தவுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 7 க்ளீன் பேட்ஸ்மேன்கள் - 6 பவுலர்கள் கிடைத்துவிட்டனர். இதை சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் கஷ்டமாக பார்க்கப்பட்டது.
டிராவிட்டின் ப்ளான்
ஆனால் இந்த மாஸ்டர் மூவ்வை டிராவிட் அடித்து உடைத்துள்ளார். இந்திய அணி 4 முழு நேர வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு ஸ்பின்னரை களமிறக்கும் அல்லது 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னரை களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ராகுல் டிராவிட் 8 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களை கொண்டு வந்துள்ளார்.
எப்படி சாத்தியம்?
அதாவது 3 முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா இருப்பார்கள். ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் வேகப்பந்துவீச்சு இரண்டிலுமே நன்கு ஆடியுள்ளார். இங்கிலாந்தை போல பகுதி நேர ஸ்பின்னரை வைக்காமல், முழு நேர ஸ்பின்னரான ஜடேஜாவை களமிறக்கியுள்ளார். ஆனால் ஜடேஜாவும் சிறந்த பேட்ஸ்மேன் என்பதால் இங்கிலாந்துக்கு பெரும் தலைவலி உண்டாகியுள்ளது.
ப்ளேயிங் 11
சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா