
அதிரடியான முடிவு
இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 வித்தியாசமான முடிவை கையில் எடுத்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அதாவது இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் 4 சுழற்பந்துவீச்சாளர்களை களமிறங்க திட்டமிட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களில் ஒரே ஒருவரை கொண்டு வருவதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி இல்லையென்றால் ஒரு பேட்ஸ்மேனை குறைத்துவிட்டு, 2வது வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வர வேண்டும்.

பிட்ச் நிலைமை
நாக்பூர் மைதானத்தின் பிட்ச்-ல் 3 நாட்களுக்கு முன்பு வரை ஓரளவிற்கு புற்கள் தெரிந்தன. இதனால் முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் இருந்தது. 3வது நாளில் இருந்து தான் ஸ்பின்னர்கள் தாக்கம் ஏற்படுத்துவார்கள். ஆனால் கடைசி நேரத்தில் புற்கள் அனைத்தையும் முற்றிலுமாக நீக்குமாறு ராகுல் டிராவிட் கோரினார். இதனால் முதல் நாளில் இருந்தே ஸ்பின்னர்களுக்கு மட்டுமே பிட்ச் கட்டுப்படும்.

ஸ்பின்னர்களின் படை
இப்படிப்பட்ட களத்தில் ஸ்பின்னர்களை கொண்ட படையை தான் நம்பியாக வேண்டும். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி யாராலும் தவிர்க்க முடியாதவர்கள். இந்த ஜோடி இந்தியாவில் மட்டும் 484 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். இந்த இருவரை சமாளிக்கவே ஆஸ்திரேலியா போராட வேண்டும். ஆனால் இவர்களுடன் குல்தீப் யாதவும் கொண்டு வரப்படுகிறார்.

மேலும் 2 வீரர்கள்
குல்தீப் யாதவின் ஃபார்ம் தற்போது யாராலும் நிறுத்த முடியாத அளவிற்கு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வங்கதேச தொடரில் கம்பேக் தந்த அவர் முதல் டெஸ்டிலேயே 8 விக்கெட்களை சாய்த்தார். அதன்பின்னர் இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் அசத்தியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் அக்ஷர் பட்டேலையும் அணிக்குள் கொண்டு வரவிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications