
சாம்பியன்ஸ் லீக் பைனல்
டெல்லியில் நேற்று சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

சச்சின் டெண்டுல்கர்..
நேற்றைய போட்டியுடன் இந்திய அணியின் நம்பிக்கை நட்சித்திரமும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார். அவர் ஏற்கெனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு
நேற்று நடந்த இறுதிப்போட்டியுடன் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியும், கரவொலி எழுப்பியும் பிரியா விடை கொடுத்தனர்.

மும்பை வீரர்கள் அணிவகுத்து மரியாதை
அத்துடன் மும்பை வீரர்களும் இருபக்கமும் அணிவகுத்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர்.

70 ரன்கள்..
40 வயதான டெண்டுல்கர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் மொத்தம் 70 ரன்கள்கள் எடுத்தார்.

டிராவிட் ஓய்வு
இதே போல் மற்றொரு ஜாம்பவானாகிய 40 வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கும் தமக்கு இதுவே கடைசி 20 ஓவர் தொடர் என்று கூறியிருந்தார். அவரும் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

48 ரன்கள்..
அவர் இந்த தொடரில் 48 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மரியாதை
டிராவிட் வெளியேறிய போதும் அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மரியாதை தெரிவித்து விடை கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications











