தூறல் மழை
போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் லேசான சாரலும், வானம் மேக மூட்டமாகவும் இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாமதமாக வாய்ப்பு?
மழைக்கு வாய்ப்பு இருப்பதால், ஆட்டம் தாமதமாக தொடங்கவும் சாதகமான சூழல் காணப்படுகிறது. ஆனால், மதியம் வானம் தெளிவாகக் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மழை 2.30 மணியளவில் இருக்கும் என்றும், மீண்டும் 6 அல்லது 7 மணிக்கு மழை வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நாளை மீண்டும் போட்டி
அதனால், சில மணி நேரம் ஆட்டம் தடைபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, மழையின் குறுக்கீட்டால் போட்டி பாதிக்கப்பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ போட்டி நாளை நடக்கும்.
ரத்தானால் என்ன நடக்கும்?
அதற்காக ரிசர்வ் டே ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. நாளையும் மழை பெய்தால் ஆட்டம் ரத்து செய்யப்ட்டு யார் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
பைனலில் இந்தியா?
தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 4 புள்ளிகள் கூடுதல் பெற்றுள்ளதால் இந்திய அணி தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதே நடைமுறை தான் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டியிலும் கடைபிடிக்கப்படும்.