
சதம் மிஸ்சிங்
இதன்மூலம் தொடர்ந்து 5வது முறையாக செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. நல்ல டச்சில் இருந்த சங்ககாரா, மறுமுனையில், 8 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால், வேறு வழியில்லாமல், அடித்து ஆட தொடங்கி அவுட் ஆனார்.

சங்ககாராவுக்கு கடைசி போட்டி..
அவர் அவுட் ஆகும்போது இலங்கை 129 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது, இலங்கை தோல்வியடைய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. எனவே, இந்த போட்டிதான், சங்ககாராவுக்கு கடைசி போட்டியாகவும் அமையும் என்ற கவலை ரசிகர்களை தொற்றியது.

வந்தார் வருண பகவான்
அப்போதுதான், அந்த சம்பவம் நடந்தது. ஆம்.. சங்ககாரா அவுட் ஆகி பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், திடீரென மழை கொட்டோ கொட்டு என கொட்டத் தொடங்கியது.

வானிலை இலாகாவே திணறல்
சிட்னியில் இன்று வானம் தெளிவாக இருக்கும் என்று வானிலை இலாகா அறிவித்திருந்த நிலையில், இந்த மழை சங்ககாரா ரசிகர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துள்ளது.

ரசிகர்களின் பாசம்
சங்ககாரா உலகத்தரம் மிக்க வீரர் மட்டுமின்றி, மனித நேயம் உள்ளவராகும். எனவே, அவர் அவுட் ஆகும்போது, வருண பகவானே மழை தூரி வாழ்த்து தெரிவித்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மழை பெய்ததால், ரசிகர்களும், அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். சங்ககாராவுக்கு இயற்கையே 'ஸ்டாண்டிங் ஓவேசன்' மரியாதை கொடுக்க செய்ததாகவும், சமூக வலைத்தளங்களில் சங்ககாரா ரசிகர்கள் உருகிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











