மீண்டும் மோதுகின்றன
நேற்று முன்தினம் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடின. அதில் பஞ்சாப் அணி அபாரமாக வென்றது. இரண்டாவது முறையாக மீண்டும் மோதின. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் வெற்றியை எதிர்பார்த்து ராஜஸ்தான் களமிறங்கியது.
வெற்றிக்காக போராட்டம்
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க ராஜஸ்தான் கடுமையாக போராட வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் தொடர் தோல்விகளை தவிர்ப்பதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க, மற்றொரு வெற்றி அதற்கு தேவை.
158 ரன்கள் குவிப்பு
ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டாஸை வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 22 ரன்கள் எடுத்தார். பஞ்சாபின் ஆன்ட்ரூ டை கடைசி ஓவரில் மூன்று விக்கெட்கள் உள்பட நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். முஜீபுர் ரஹ்மான் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பஞ்சாபுக்கு அதிர்ச்சி
20 ஓவர்களில் 159 ரன்கள் தேவை என்ற நிலையில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. ராஜஸ்தானின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. பஞ்சாப் அணியின் விக்கெட்களை தொடர்ந்து வீழத்தியது. ஒரு பக்கம் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கடைசி வரை நின்று 70 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற 9 பேரும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தணர். அதில் மார்கஸ் ஸ்டோனிஸ் மட்டுமே 11 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாயினர்.
கடைசியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு பஞ்சாப் அவுட்டானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.