அருமையான தொடக்கம்
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பது 20 ஓவர் போட்டிகளில் எளிதான இலக்கு. எனவே.. மிகுந்த நம்பிக்கையுடன் தொடக்க வீரர்களாக கேப்டன் ரகானேவும், மன்கட் பலிகடா ஜாஸ் பட்லரும் களம் இறங்கினர்.
நிதானமாக ஆடினர்
இருவரும் பொறுமையாக... தவறான பந்துகளை சரியாக தேர்ந்தெடுத்து பொறுப்பாக ஆடினர். இந்த ஜோடியை பிரித்து... அணிக்கு பிரேக் எடுப்பது எப்படி என்று தெரியாமல் பெங்களூர் அணி தடுமாறியது என்றே சொல்லலாம்.
8வது ஓவரில் அவுட்
8வது ஓவரில் பெங்களூர் அணியின் பந்துவீச்சு பலித்தது. சாஹல் பந்தில் எல்பிடபிள் யூ முறையில் ரகானே ஆட்டம் இழந்தார். முதல் முறையாக பெங்களூர் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.
பட்லர் அபாரம்
2வது விக்கெட்டுக்கு கை கோர்த்தார் ஸ்மித். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரன் ரேட்டும் உயர... சிறப்பாக ஆடிய பட்லர் அரை சதம் கடந்தார்.
வீரர்கள் அக்கறை
வெற்றி முக்கியம் என்பதை ராஜஸ்தான் வீரர்கள் உணர்ந்திருந்தனர். அதிரடி ஆட்டம் என்பதை கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு.... மெதுவாக ரன்களை சேர்ப்பதிலும் விக்கெட்டுகளை காப்பாற்றுவதிலும் ராஜஸ்தான் வீரர்கள் அக்கறை காட்டினர்.
பட்லர் அவுட்
அவர்களின் இந்த ஐடியா ஓரளவு கை கொடுத்தது என்றே கூறலாம். இருப்பினும், நிதானமாக ஆடிய பட்லர் அணியின் ஸ்கோர் 104 ரன்களாக இருந்த போது அவுட்டானார். அவர் எடுத்தது 59 ரன்கள்.
ஸ்மித் ஆட்டமிழந்தார்
அதன்பிறகு... மற்றவர்களின் விக்கெட்டுகளை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என்று பெங்களூர் பந்துவீச்சாளர்கள் முயற்சித்தனர். ஆனாலும் அதற்கான பலன் அணியின் ஸ்கோர் 154 ஆக இருந்தபோது ஸ்மித் ஆட்டமிழந்தார்.
கவலையில் ரசிகர்கள்
பந்துகளும், எடுக்கவேண்டிய ரன்களும் சரிசமமாக இருந்து வந்ததால்.... யாருக்கு வெற்றி என்பது ஒரு கட்டத்தில் தீர்மானிக்க முடியாமல் இருந்தது. ரசிகர்களும் கவலையுடன் இருந்ததை நன்றாக காண முடிந்தது.
ராஜஸ்தான் வெற்றி
இறுதியாக... ஒரேயொரு பந்தை மீதம் வைத்து 19.5வது ஓவரில் திரிபாதி சிக்சர் அடித்து ஆ....... ட்டத்தை முடித்து வைத்தார். இதையடுத்து, பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலுக்குள் ராஜஸ்தான் நுழைந்தது.