For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் இன்னிங்ஸ்ல நல்லா தானே ஆடினாங்க... சில சமயம் இப்படி ஆகும்... சுக்லா விளக்கம்

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து இந்தியாவின் பேட்டிங் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர், இந்திய பேட்டிங் குறித்து கவலை கொண்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவராக நியமிக்கப்படவுள்ள ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா முன்னிலை

ஆஸ்திரேலியா முன்னிலை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியுடன் கூடிய 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடப்பட்ட பகலிரவு போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா 4க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா சொதப்பல்

இந்தியா சொதப்பல்

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அடுத்ததாக நடைபெறவுள்ள 3 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் செயல்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சுக்லா விளக்கம்

சுக்லா விளக்கம்

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இந்திய பேட்டிங் குறித்து கவலை கொண்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவராக நியமிக்கப்படவுள்ள ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் செயல்பாட்டை மேம்படுத்தும்வகையில் அவர்கள் சில திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் சுக்லா கூறியுள்ளார்.

சுக்லா நம்பிக்கை

சுக்லா நம்பிக்கை

அடுத்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பகலிரவு போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதை சுட்டிக் காட்டிய சுக்லா, இரண்டாவது இன்னிங்சில் ஏற்பட்டது போல சில நேரங்களில் நடக்கும் என்றும் கூறினார்.

வீரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

வீரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

இந்திய வீரர்களின் திறனை முன்னேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், மெல்போர்னின் விக்கெட் கண்டீஷனை கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் செயல்பட வேண்டும் என்றும் சுக்லா குறிப்பிட்டுள்ளார். அணி வீரர்களை பயற்றுவிக்கும் வகையில் டிராவிட் உள்ளிட்ட யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் அதற்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Tuesday, December 22, 2020, 10:07 [IST]
Other articles published on Dec 22, 2020
English summary
Our performance in the first innings against the hosts was good -Shukla
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+