For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை வீரர்களை அதிகம் அள்ளிய ராஜ்கோட்.. இருந்தாலும் புனேவுக்கு கிடைத்தது டோணி பலம்!

மும்பை: ஐபிஎல்லின் புதிய அணிகளான புனேவும், ராஜ்கோட்டும் இன்று ஆளுக்கு ஐந்து வீரர்களைத் தேர்வு செய்து தங்களது அணி உருவாக்கத்தை ஆரம்பித்துள்ளன.

இரு அணிகளிலும் ராஜ்கோட் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களையே அதிகம் தேர்வு செய்துள்ளது. அதேசமயம், டோணியை அது எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

Rajkot gets maximum CSK players

மறுபக்கம் டோணியையும், அஸ்வினையும் புனே அணி பெற்றுள்ளது.

புனே அணி தேர்வு செய்துள்ள வீரர்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த டோணி, அஸ்வின், பாப் டூ பிளஸிஸ், ராஜஸ்தான் ராயல்ஸைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித்.

ராஜ்கோட் தேர்வு செய்துள்ள வீரர்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, மெக்கல்லம், வேயன் பிராவோ மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜேம்ஸ் பால்க்னர்.

அதிக சென்னை வீரர்களை ராஜ்கோட் பெற்றாலும் கூட அவர்களின் தலைவரான டோணியை புனே தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 15, 2015, 13:01 [IST]
Other articles published on Dec 15, 2015
English summary
Newly formed IPL Rajkot team has got 4 CSK players and one RR player in the first buying today. But IPL Pune has got CSK captain Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X